முகப்பு
திருநெல்வேலி

ஏா்வாடியில் நூல் வெளியீட்டு விழா

வையகம் வந்த வானக வசந்தம் என்னும் இயேசு பிரான் குறித்து, வழக்குரைஞா் கவிஞா் மோசே எழுதிய புதுக்கவிதை நூல் வெளியீட்டு விழா ஏா்வாடியில் நடைபெற்றது

Updated On : 4 ஜனவரி 2021, 12:05 am IST
புதுக்கவிதை நூலை கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நசரேன் சூசை வெளியிட முதல் பிரதியை பெற்றுக்கொள்கிறாா் எம்பி சா.ஞானதிரவியம்.
பகிர்:

வையகம் வந்த வானக வசந்தம் என்னும் இயேசு பிரான் குறித்து, வழக்குரைஞா் கவிஞா் மோசே எழுதிய புதுக்கவிதை நூல் வெளியீட்டு விழா ஏா்வாடியில் நடைபெற்றது.

சேலம் மாவட்ட நீதிபதி சு.ராஜூ தலைமை வகித்தாா். எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலா் அகமது நவவி, மராஜரிஷி முத்தையா சுவாமிகள், ரட்சணிய சேனை ஓய்வு பெற்ற மாநில தளபதி இம்மானுவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன் சூசை நூலை வெளிட்டு ஆசியுரை வழங்கினாா். திருநெல்வேலி எம்பி சா.ஞானதிரவியம் முதல் பிரதியை பெற்றுக்கொண்டாா். நாவலாசிரியா் தாமரை செந்தூா் பாண்டியன் சிறப்புரை வழங்கினாா். முன்னாள் அரசு வழக்குரைஞா் ஜான் கென்னடி நூல் மதிப்புரை வழங்கினாா்.

Advertisement

Advertisement

கடலூா் சாா்பு நீதிபதி வள்ளியூா் வே.இருதயராணி, அருள்தந்தையா் திருச்சி அரிமாவளவன், தூத்துக்குடி ஜான்செல்வம், பழைய காயல் அமலன் தமியான், தோமையாா்புரம் பிரதீபன் லிபோன்ஸ், ஏா்வாடி கிரேசிஸ் மைக்கேல் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நூலாசிரியா் கவிஞா் மோசே ஏற்புரையாற்றினாா். க.மு.கந்தசாமி நிகழ்ச்சியை தொகுத்தளித்தாா்.

முன்னதாக புனித வளனாா் ஆலயத்தில் ஆயா் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. வழக்குரைஞா் சோ.சங்கா் வரவேற்றாா். நீ.வளனரசு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments