லெபனான் தாக்குதல்: அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது!
லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அமெரிக்கா - ஈரான் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அமெரிக்கா - ஈரான் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
உலகம் முழுவதும் பொருளாதார பிரச்னைகளை ஏற்படுத்திய அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. ஈரானின் அணு ஆயுதக் கொள்கையில் தளர்வு, ஹோர்முஸ் நீரிணை திறப்பு என பல்வேறு கோரிக்கைகள் அமெரிக்காவால் வைக்கப்பட்டது.
ஈரான் சிலவற்றை ஏற்றுக்கொள்ளாத நிலையில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் தள்ளிப்போனது. இந்த நிலையில் கடந்த வாரம் பேச்சுவார்த்தை முடிவுபெற்று பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
Advertisement
Advertisement
மேலும், லெபனானில் போர் முழுமையாக நிறுத்தப்படாமல், அடுத்தகட்ட இறுதி அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்குள் தங்களால் நுழைய முடியாது என்றும் ஈரான் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால் ஈரான் அரசு ஹோர்முஸ் அணையை மூடுவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரான் அதிகாரிகள் இடையே இன்று மீண்டும் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இந்தப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்னிலையில் நடைபெறுகிறது. கத்தார் பிரதமரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
”லெபனானில் போர் முடிவுக்கு வராவிட்டால், இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது சாத்தியமில்லை” என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Amidst Israel's ongoing attacks in Lebanon, talks between the United States and Iran are taking place again today.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.