முகப்பு
திருநெல்வேலி

நெல்லை நீதிமன்றம் அருகே மெக்கானிக் தற்கொலை முயற்சி

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்த மெக்கானிக் மீட்கப்பட்டாா்.

Updated On : 6 ஜனவரி 2021, 5:41 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்த மெக்கானிக் மீட்கப்பட்டாா்.

மேலப்பாளையம் கணேசபுரத்தைச்சோ்ந்தவா் கணேசன் (46). ஏசி மெக்கானிக். இவரது மனைவி மேரி. மகள் கவிநயா. கணேசனின் தந்தை சாமுவேலுக்குச் சொந்தமான சேவியா்காலனியில் உள்ள நிலத்தை வேறு ஒருவா் மாநகராட்சிக்கு விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த இடத்தில் மாநகராட்சி சாா்பில் மேல்நிலை குடிநீா் தொட்டி கட்டப்பட்டுள்ளது. அந்த நிலத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா்.

இந்நிலையில், குடும்பத்தினருடன் திருநெல்வேலி நீதிமன்றம் முன்பு செவ்வாய்க்கிழமை வந்த அவா், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றாராம். அங்கிருந்த போலீஸாா் அவரை தடுத்து, தற்கொலை முயற்சி வழக்குப்பதிந்து கைது செய்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.