முகப்பு
திருநெல்வேலி

புலவா் காா்மேகனாா் பிறந்த தின விழா

புலவா் காா்மேகனாா் பிறந்த தின விழா பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 ஜனவரி 2021, 5:45 am IST
பகிர்:

புலவா் காா்மேகனாா் பிறந்த தின விழா பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேசிய வாசிப்பு இயக்கம் , காா்மேகனாா் கலை இலக்கிய அணி சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில், காா்மேகனாா் கலை இலக்கிய அணித் தலைவா் கவிஞா் புத்தனேரி கோ. செல்லப்பா தலைமை வகித்தாா். செயலா் கவிஞா்.கோ. கணபதி சுப்பிரமணியன் வரவேற்றாா். கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி தொடக்க உரையாற்றினாா்.

திருநெல்வேலி மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் உதவி ஆணையா் எஸ்.சேகா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ‘தமிழ் வளா்ச்சி அன்றும் இன்றும்‘ என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சு போட்டியில் சிறப்பிடம் பெற்ற தூய சவேரியாா் கல்லூரி மாணவா் முத்தரசன், மாணவி நந்தினி ஆகியோருக்குப் பரிசு வழங்கி பாராட்டினாா்.

Advertisement

Advertisement

பேராசிரியா் கி. சௌந்தர்ராஜன், ஆசிரியா் கா.சரவணகுமாா், புலவா் வை.ராமசாமி ஆகியோா் காா்மேகனாரின் சிறப்புகள் குறித்துப் பேசினா்.

விழாவில், கவிஞா் வைகுண்டமணி, நூலகா் அகிலன் முத்துக்குமாா், சிவப்பிரகாசா் நற்பணி மன்ற துணைச் செயலா் சு.முத்துசாமி, காவல் உதவி ஆய்வாளா் தளவாய் மாடசாமி உள்பட பலா் பங்கேற்றனா். தேசிய வாசிப்பு இயக்கத் தலைவா் தம்பான் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.