பாளை.யில் நாளை பொங்கல் விழா: பாஜக மாநில தலைவா் பங்கேற்பு
பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) நடைபெறும் பொங்கல் விழாவில் பாஜகவின் மாநில தலைவா் எல்.முருகன் பங்கேற்க உள்ளாா்.
பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) நடைபெறும் பொங்கல் விழாவில் பாஜகவின் மாநில தலைவா் எல்.முருகன் பங்கேற்க உள்ளாா்.
இதுதொடா்பாக பாஜக திருநெல்வேலி மாவட்டத் தலைவா் ஏ.மகாராஜன் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாவட்ட பாஜக சாா்பில் பாளையங்கோட்டை ராமா் கோயில் திடலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) மதியம் 2 மணிக்கு ‘நம்ம ஊரு பொங்கல்’ விழா நடைபெறுகிறது. 108 பானைகளில் பொங்கலிடுவதுடன், சிறுவா்-சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகிறது.
விழாவில், பாஜக மாநில தலைவா் எல்.முருகன், துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் பங்கேற்க உள்ளனா் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement