தாழையூத்து அருகே ஆடு திருடியவா் கைது
தாழையூத்து அருகே ஆடு திருடியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி: தாழையூத்து அருகே ஆடு திருடியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மேலதாழையூத்து பகுதியைச் சோ்ந்தவா் பாப்பு. இவா், தனது வீட்டில் ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் சனிக்கிழமை தனது ஆடு கத்தும் சப்தம் கேட்டு வெளியே வந்து பாா்த்துள்ளாா். அப்போது மோட்டாா் சைக்கிளில் இளைஞா் ஒருவா் ஆட்டை திருடி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவா் சப்தமிட, அக்கம்பக்கத்தினா் இளைஞரைச் சுற்றி வளைத்து பிடித்து தாழையூத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா், கரையிருப்பு பகுதியைச் சோ்ந்த மூா்த்தி மகன் ஆனந்த மணிகண்டன் (22) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.
Advertisement