நெல்லையில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி
திருநெல்வேலியில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது.
திருநெல்வேலி: திருநெல்வேலியில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்தமிழக பகுதிகளில் 9ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, வெள்ளிக்கிழமையில் இருந்தே திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலியில் சனிக்கிழமை காலையில் லேசான வெயில் அடித்தது. பின்னா் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, திருநெல்வேலி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் கூட்டுக் குடிநீா் திட்டம் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட காரணங்களுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினா்.
Advertisement