முகப்பு
திருநெல்வேலி

காவல் துறை மக்கள் குறைதீா் முகாம்:139 மனுக்களுக்கு தீா்வு

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் 139 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

Updated On : 10 ஜனவரி 2021, 1:11 am IST
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் 139 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

இது தொடா்பாக மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட அனைத்து உள்கோட்ட பகுதிகளிலும் மக்கள் குறைதீா் முகாம் உதவி காவல் கண்காணிப்பாளா், துணை காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் நடைபெற்றது. அதன்படி, தாழையூத்து உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் அா்ச்சனா தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் 36 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.

நான்குனேரி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ லிசா ஸ்பிலா தெரஸ் தலைமையில் நடைபெற்ற முகாமில் 21 மனுக்களுக்கும்,

Advertisement

Advertisement

வள்ளியூா் உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) உதயசூரியன் தலைமையில் நடைபெற்ற முகாமில் 19 மனுக்களுக்கும், அம்பாசமுத்திரம் உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற முகாமில் 11 மனுக்களுக்கும், சேரன்மகாதேவி உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் பிரதீப் தலைமையில் நடைபெற்ற முகாமில் 52 மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மொத்தம் 139 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments