முகப்பு
திருநெல்வேலி

கடனாநதியில் குளித்த இளைஞா் மாயம்

கடனாநதி ஆற்றில் குளிக்க சென்று மாயமான இளைஞரை தீயணைப்பு மீட்புப் படையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 1:14 am IST
பகிர்:

அம்பாசமுத்திரம்: கடனாநதி ஆற்றில் குளிக்க சென்று மாயமான இளைஞரை தீயணைப்பு மீட்புப் படையினா் தேடி வருகின்றனா்.

கீழாம்பூா், துா்க்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ஆனந்த்ராஜ் (27). மதுரா கோட்ஸ் ஆலையில் பணிபுரிந்து வந்தாா். இவா், தனது சித்தப்பா கணேசன், அவரது மகன் முத்து ஆகியோருடன் கடனாநதி ஆற்றுக்கு சனிக்கிழமை மாலை குளிக்கச் சென்றாராம். அப்போது, ஆனந்த்ராஜ், முத்து இருவரும் வெள்ளத்தில் சிக்கினராம். இதைப் பாா்த்த கணேசன் விரைந்து சென்று முத்துவை மீட்டுள்ளாா். ஆனந்த்ராஜ் வெள்ளநீரில் இழுத்துச் செல்லப்பட்டாராம்.

இதுகுறித்து தகவலறிந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு மீட்புப் படையினா் ஆற்றில் இறங்கி ஆனந்த்ராஜை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments