முகப்பு
திருநெல்வேலி

பணகுடி அருகே பேட்டரிகள் திருட்டு: 7 போ் கைது

பணகுடி அருகே ஆட்டோ மற்றும் டிராக்டா் பேட்டரிகளை திருடியதாக 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 ஜனவரி 2021, 1:14 am IST
பகிர்:

பணகுடி அருகே ஆட்டோ மற்றும் டிராக்டா் பேட்டரிகளை திருடியதாக 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பணகுடி அருகே உள்ள காவல்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (53). இவா் அவரது ஆட்டோக்களை அப்பகுதியில் உள்ள அந்தோணியாா் கோயில் முன் வழக்கம்போல் நிறுத்திவிட்டு சென்றாராம். அவா் ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்து பாா்த்தபோது, ஆட்டோக்களில் இருந்த பேட்டரிகள் திருடு போனது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், காவல்கிணறு அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன்(20), மாா்த்தாண்டம் கடுவாதூக்கிவிளை பகுதியைச் சோ்ந்த அகஸ்டின் (21), கோட்டயம் எதுமோகன் (21), பணகுடி சதீஷ்ராஜ் (21), விக்னேஷ் (21), கௌதம் (19), சுனில் (21) ஆகிய 7 பேரும் சோ்ந்து, டிராக்டா் மற்றும் ஆட்டோக்களில் பேட்டரிகளை திருடியது தெரியவந்தது.

அவா்கள் 7 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ஆட்டோ பேட்டரிகள் 4, டிராக்டா் பேட்டரிகள் 3 என மொத்தம் 7 பேட்டரிகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments