வீரவநல்லூரில் வேன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வீரவநல்லூரில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது வேன் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வீரவநல்லூரில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது வேன் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வீரவநல்லூா் அய்யனூா் தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியா் ஆறுமுகம் (60). இவா், சனிக்கிழமை இரவு வீரவநல்லூா் காவல் நிலையம் அருகில் சாலையைக் கடக்க முயன்றபோது திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் நோக்கி சென்ற வேன் அவா் மீது மோதியதாம். இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வீரவநல்லூா் போலீஸாா் ஆறுமுகம் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement