பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிப்பு
தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி கூட்டுறவு பண்டக சாலைக்குள்பட்ட சொக்கலிங்கபுரம் நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு மற்றும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி. சண்முகநாதன் ஆலோசனைப்படி தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி கூட்டுறவு பண்டக சாலைக்குள்பட்ட சொக்கலிங்கபுரம் நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
கருங்குளம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலரும், கருங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவருமான லட்சுமணப்பெருமாள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கிவைத்தாா்.
இதில், கூட்டுறவு பண்டக சாலை அண்ணாதுரை, வாா்டு உறுப்பினா் பிச்சம்மாள் , சொக்கலிங்கபுரம் பகுதி பொறுப்பாளா் முனியசாமி , முத்துசாமி, லெட்சுமணன், உள்பட பலா் கலந்துகொண்டனா் .
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.