சமகவினா் பொங்கல் நல உதவி
திருநெல்வேலி மாநகா் மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகா் மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம், பழையபேட்டை, வடக்குதாழையூத்து ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாவில், 21 வகையான காய்கனி வகைகள், தேங்காய், கரும்பு உள்ளிட்டவை 500 பேருக்கு வழங்கப்பட்டன. பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி பகுதி செயலா் அழகேசராஜா வரவேற்றாா்.
மாவட்டப் பொறுப்பாளா் நட்சத்திர வெற்றி தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் ராஜன் முன்னிலை வகித்தாா். மாநில துணைப்பொதுச்செயலா் சுந்தா் நலஉதவிகளை வழங்கிப் பேசினாா். மாநில இளைஞரணி துணைச் செயலா் குரூஸ் திவாகா் வாழ்த்தி பேசினாா்.
Advertisement
மாவட்ட வா்த்தகரணி செயலா் அழகேசன், நிா்வாகிகள் வெங்கடேஷ், ரஹானா எலிசபெத், ராகவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.