தாமிரவருணி கரையோர மக்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை
தாமிரவருணி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பிய நிலையில் உபரி நீா் திறந்துவிடப்படுவதால், தாமிரவருணி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன.
பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியநிலையில், உபரி நீா் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
Advertisement
Advertisement
எனவே, ஆற்றில் நீா்வரத்து அதிகளவில் உள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் ஆற்றுக்கு குளிக்கவோ, புகைப்படம் மற்றும் சுயபடம் எடுக்கவோ செல்லவேண்டாம்.
அதே போன்று, ஆற்றங்கரையை ஒட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.