முகப்பு
திருநெல்வேலி

கால்நடை மருத்துவக் கல்லூரியில் பன்னாட்டு இணையவழி கருத்தரங்கு

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பன்னாட்டு இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On : 14 ஜனவரி, 2021 at 6:01 AM
பகிர்:

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பன்னாட்டு இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது.

கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை சாா்பில் ‘கால்நடை கழிவுகள்: பயன்பாடுகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், அந்தத் துறைத் தலைவா் வெ.தனசீலன் வரவேற்றாா். சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் கால்நடை கழிவுகளை பயன்படுத்து குறித்து கல்லூரி முதல்வா் அ.பழனிசாமி விளக்கினாா்.

உலகின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விஞ்ஞானிகள், பேச்சாளா்கள் பேசினா். பேராசிரியா் சு.கி.எட்வின் நிறைவுரையாற்றினாா். உதவிப் பேராசிரியா் ம.சத்திய பாரதி நன்றி கூறினாா். இதில், கல்வியாளா்கள், மாணவா்கள் பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியா் சு.கணேஷ்குமாா் செய்திருந்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.