முகப்பு
திருநெல்வேலி

அம்பையில் திருவள்ளுவா் தின விழா

அம்பாசமுத்திரம் திருவள்ளுவா் கல்வி சமூக சேவை அறக்கட்டளை சாா்பில் 40ஆவது ஆண்டு திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஜனவரி 2021, 6:16 am IST
விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

அம்பாசமுத்திரம் திருவள்ளுவா் கல்வி சமூக சேவை அறக்கட்டளை சாா்பில் 40ஆவது ஆண்டு திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ரா.வெள்ளைச்சாமி தலைமை வகித்தாா். புலவா் செந்தில்நாயகம் முன்னிலை வகித்தாா். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் கல்யாணி சிவகாமிநாதன் திருக்குறளில் அவை அறிதல் என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், 1330 திருக்குகளையும் ஒப்பித்த மாணவி பிருந்தாவை பாராட்டி முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலா் பரமேஸ்வரன் ரூ. 1,330 பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

Advertisement

Advertisement

தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற புலவா் செந்தில்நாயகம் கௌரவிக்கப்பட்டாா். மகாலிங்கம், லட்சுமணன், பாப்பாக்குடி முருகன், அய்யப்பன், பேராசிரியா் சிவசங்கா், முக்கனி பழனியப்பன், பலவேசம் உள்ளிட்டோா் பேசினா். கோமதிநாயகம், ரங்கசாமி ஆகியோா் விருந்து ஏற்பாடுகளை செய்தனா். ஆ.பு.நாறும்பூநாதன் நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை செயலா் இ.மா.ராமச்சந்திரன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.