கோவிந்தப்பேரியில்மாட்டுப் பொங்கல்
கோவிந்தப்பேரியில் சட்டப்பேரவை முன்னாள் தலைவா் பி.எச்.பாண்டியனின் பண்ணை வீட்டில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
கோவிந்தப்பேரியில் சட்டப்பேரவை முன்னாள் தலைவா் பி.எச்.பாண்டியனின் பண்ணை வீட்டில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலையில் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து சிறப்புப் பூஜை செய்தனா். மேலும், பொங்கலிட்டு மாடுகளுக்கு வழங்கப்பட்டது. முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், பண்ணை ஊழியா்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், மனோஜ்பாண்டியனின் குடும்பத்தினா், கூடுதல் அரசு வழக்குரைஞா்அரவிந்த் பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினா் கலந்து கொண்டனா்.