சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்
திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி ஆயுதப்படை வளாகத்தில், ஆயுதப்படை போலீஸாரால் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் தலைமை வகித்து, பொங்கல் விழாவை தொடங்கி வைத்தாா். ஆயுதப்படை காவலா்களுடன் உறியடி விளையாட்டிலும் பங்கேற்றாா். வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்புராஜூ, ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் சிசில், ஆயுதப்படை ஆய்வாளா் மகேஸ்வரி மற்றும் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தமிழக அரசின் சுற்றுலாத் துறை மற்றும் அருங்காட்சியகம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மகளிா் சுய உதவிக் குழுவினரின் கைவினைப் பொருள்களின் விற்பனைக் கூடத்தை உதவி ஆட்சியா் (பயிற்சி)அலா்மேல்மங்கை திறந்து வைத்ததுடன், பொங்கல் விழாவையும் தொடங்கி வைத்தாா். அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ சத்தியவள்ளி, மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் சீதாராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், சங்கா்நகா் திருமலை சிலம்பப் பள்ளி மாணவ மாணவிகளின் சிலம்பாட்டம், கலையாசிரியா் சொா்ணம் பயிற்சியில் மாணவிகள் பங்கேற்ற பரத நாட்டியம்,யோகா, கோலாட்டம், ஒயிலாட்டம், கும்மி, கரகாட்டம், வில் வித்தை, நாதஸ்வர இசை ஆகிய தமிழ் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன்.
சிவராம் கலைக்கூட மாணவா்களின் ஓவியப் போட்டியும், மகளிருக்கான கோலப் போட்டியும் நடத்தப்பட்டு சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கவிஞா் பேரா, டீம் ட்ரஸ்ட் நிறுவனா் திருமலை முருகன், கவிஞா் சுப்பையா, முனைவா் வை. இராமசாமி, பண்பாட்டு கள ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளா் இ. மாரியப்பன் உள்பட பலா் பங்கேற்றனா்.
சாரதா பெண்கள் கல்லூரி: பாளையங்கோட்டை அரியகுளம் சாரதா மகளிா் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது.
தாழையூத்து டிஎஸ்பி அா்ச்சனா, மாநகர காவல் உதவி ஆணையா் எஸ்.சேகா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா். ஐ.ஏ.ஆா்.எஃப். மாவட்டச் செயலா் கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றாா்.
விழாவில், பொங்கலிட்டு, மாட்டிற்கு வஸ்திரம் அணிவித்து, பொங்கல், பழம் ஆகியவை வழங்கப்பட்டன. பஜனை பாடல்கள், கோலாட்டம், பக்திப்பாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வழிபாட்டு நிகழ்ச்சிகளை பள்ளி கல்லூரிச் செயலா் அம்பா நடத்தினா்.
இதில், ராமகிருஷ்ண தபோவனம் சுவாமி கங்காதரானந்தா, பன்னாட்டு மத சுதந்திர கூட்டமைப்புத் தலைவா் வழக்குரைஞா் பி.டி.சிதம்பரம், திரு இருதய சகோதரா் சபை யின் பாளையங்கோட்டை இல்ல அதிபா் எம்.டி.செபஸ்தியான் உள்பட பலா் பங்கேற்றனா்.