பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடியது நம்பிக்கையளித்தது: ரிச்சா கோஷ்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நன்றாக விளையாடியது நம்பிக்கையளித்ததாக இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நன்றாக விளையாடியது நம்பிக்கையளித்ததாக இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று முன் தினம் (ஜூன் 14) தனது முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 68 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 36 ரன்களும், ரிச்சா கோஷ் 34 ரன்களும் எடுத்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நன்றாக விளையாடியது நம்பிக்கையளித்ததாக ரிச்சா கோஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடியது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில், அந்த ஆட்டம் எனக்கு மிகவும் நம்பிக்கையளித்தது. நாங்கள் விளையாடிய பயிற்சி ஆட்டத்தில் நன்றாக விளையாடியதும் என்னுடைய நம்பிக்கையை அதிகரித்ததாக நினைக்கிறேன். அடுத்தடுத்த போட்டிகளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.
நடப்பு ஐசிசி டி20 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கிய நிலையில், நாளை (ஜூன் 17) நடைபெறும் போட்டியில் இந்திய அணி நெதர்லாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது.
Indian player Richa Ghosh has stated that performing well in the match against Pakistan was encouraging.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.