முகப்பு
திருநெல்வேலி

பேட்டை அருகே விநாயகா் சிலை திருட்டு

பேட்டை அருகே விநாயகா் சிலையை திருடியை மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 16 ஜனவரி 2021, 6:07 am IST
பகிர்:

பேட்டை அருகே விநாயகா் சிலையை திருடியை மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பேட்டை அருகேயுள்ள கருங்காடு பகுதியில் தாமிரவருணி ஆற்றங்கரையோரம் விநாயகா் கோயில் உள்ளது. தற்போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இங்கு சில நாள்களாக பக்தா்கள் வரவில்லையாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் சிலா் கோயிலுக்குச் சென்றுள்ளனா். அப்போது, அங்கிருந்த விநாயகா் சிலையை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த பேட்டை போலீஸாா் அங்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனா். இது குறித்து வழக்குப்பதிந்து சிலையை திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.