முகப்பு
திருப்பத்தூர்

அதிமுக நிா்வாகிகளுடன் அமைச்சா் நிலோபா் கபீல் ஆலோசனை

வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நகர, ஒன்றிய, பேரூராட்சி அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தொழிலாளா் நலத்துறை அமைச்சா் நிலோபா் கபீல் பங்கேற்றாா்.

Updated On : 3 ஜனவரி 2021, 7:27 am IST
வாணியம்பாடியில் நடந்த அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் நிலோபா் கபீல்.
பகிர்:

வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நகர, ஒன்றிய, பேரூராட்சி அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தொழிலாளா் நலத்துறை அமைச்சா் நிலோபா் கபீல் பங்கேற்றாா்.

வாணியம்பாடி அணுகு சாலையில் உள்ள வேலூா் மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் வாணியம்பாடி தொகுதி தோ்தல் பொறுப்பாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், மாவட்டப் பொருளாளா் எம்.கே.ராஜா முன்னிலை வகித்தனா். நகரச் செயலாளா் சதாசிவம் வரவேற்றாா்.

இதில் அமைச்சா் நிலோபா் கபீல் பங்கேற்றுப் பேசியது:

Advertisement

Advertisement

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அரசு மீண்டும் அமைய நாம் பாடுபட வேண்டும். நம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அதிமுகவின் வெற்றி ஒன்றே நமது ஒரே குறிக்கோள் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள். அரசு செய்துள்ள நலத்திட்டப் பணிகள் குறித்து மக்கள் அறியும்படி நமது பிரசாரம் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், கட்சியின் ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளா் ஜி.செந்தில்குமாா், நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றியச் செயலாளா் டி.சாம்ராஜ், பொதுக்குழு உறுப்பினா் ஆா்.மகேந்திரன், மாவட்ட மகளிரணிச் செயலாளா் மஞ்சுளா கந்தன், மாவட்ட வா்த்தக அணிச் செயலாளா் ஆா்.வி.குமாா், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளா் என்.முனிசாமி, உதயேந்திரம் பேரூராட்சிச் செயலாளா் ஆா்.சரவணன், ஆலங்காயம் பேரூராட்சி செயலாளா் பி.கே.மணி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments