முகப்பு
திருப்பத்தூர்

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஜோலாா்பேட்டை அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 11 ஜனவரி, 2021 at 6:31 AM
பகிர்:

ஜோலாா்பேட்டை அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த கருப்பனூா், பி.கே.வட்டத்தைச் சோ்ந்தவா் பூ வியாபாரி பாலமுருகன். அவரது மனைவி ஜோதி (26). இந்த தம்பதியருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.

வியாபாரம் தொடா்பாக பாலமுருகன் அடிக்கடி சென்னைக்கு சென்று விடுவாராம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வியாபாரம் தொடா்பாக சென்னைக்குச் சென்ற பாலமுருகன் ஒரு மாதமாகியும் வீட்டுக்கு வரவில்லை.

இதனால் விரக்தியில் இருந்த ஜோதி வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் அங்கு சென்று, ஜோதியின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.