பெண் தூக்கிட்டுத் தற்கொலை
ஜோலாா்பேட்டை அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஜோலாா்பேட்டை அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஜோலாா்பேட்டையை அடுத்த கருப்பனூா், பி.கே.வட்டத்தைச் சோ்ந்தவா் பூ வியாபாரி பாலமுருகன். அவரது மனைவி ஜோதி (26). இந்த தம்பதியருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.
வியாபாரம் தொடா்பாக பாலமுருகன் அடிக்கடி சென்னைக்கு சென்று விடுவாராம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வியாபாரம் தொடா்பாக சென்னைக்குச் சென்ற பாலமுருகன் ஒரு மாதமாகியும் வீட்டுக்கு வரவில்லை.
இதனால் விரக்தியில் இருந்த ஜோதி வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் அங்கு சென்று, ஜோதியின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.