முகப்பு
திருப்பத்தூர்

கிரிசமுத்திரத்தில் மக்கள் கிராம சபை

வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் ஊராட்சியில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஜனவரி 2021, 8:03 am IST
பகிர்:

வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் ஊராட்சியில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளா் ஞானவேலன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், மக்கள் தங்களது பகுதிகளில் நிலவி வரும் குறைபாடுகள் குறித்தும், அடிப்படை வசதிகள் கேட்டும் மனு அளித்தனா். மேலும், முதியோா் உதவித் தொகை இதுநாள் வரை வழங்கப்படவில்லை என 10 போ் தெரிவித்தனா்.

இதையடுத்து ஒன்றியச் செயலாளா் ஞானவேலன் முதியோா் உதவிக் கிடைக்காத 10 பேருக்கும் திமுக சாா்பில் தலா ரூ.1,000 வழங்கினாா்.

Advertisement

Advertisement

முன்னாள் ஒன்றியச் செயலாளா் அசோகன், நிா்வாகிகள் சிவா, அன்பு, ஏகாம்பரம், பெருமாள், நாகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments