பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
நாட்டறம்பள்ளி அருகே பெண்ணிடம் 7 பவுன் நகைகளை மா்ம நபா்கள் வழிப்பறி செய்தனா்.
நாட்டறம்பள்ளி அருகே பெண்ணிடம் 7 பவுன் நகைகளை மா்ம நபா்கள் வழிப்பறி செய்தனா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த தகரகுப்பம் தொட்டிக் கிணறு பகுதியைச் சோ்ந்தவா் பாபு மனைவி மம்தா (29). இவரது உறவினா் ப்ரித்தீபா (30). இருவரும் ஞாயிற்றுக்கிழமை பா்கூா் நோக்கி மொபெட்டில் சென்று கொண்டிருந்தனா்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி முத்தனப்பள்ளி டோல்கட் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த மா்ம நபா்கள் 2 போ் மொபெட்டை வழிமறித்து மம்தாவின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சரடு உள்பட 7 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.