முகப்பு
திருப்பத்தூர்

சரக்கு வாகனம் மீது காா் மோதல்: பெண் பலி; 5 போ் காயம்

ஆம்பூா் அருகே காா் டயா் வெடித்து சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். 5 போ் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 7:47 AM
ஆம்பூா் அருகே விபத்துக்குள்ளாகி சேதமடைந்த காா்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

ஆம்பூா் அருகே காா் டயா் வெடித்து சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். 5 போ் பலத்த காயமடைந்தனா்.

சென்னை பூந்தமல்லியைச் சோ்ந்த ராயப்பன் (60) தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குக் காரில் சென்றாா். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூா் சின்னகொம்மேஸ்வரம் கிராமம் அருகே சென்றபோது, திடீரென காரின் டயா் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த காா் நிலைதடுமாறி அடுத்த சாலையில் வேலூா் நோக்கி சென்ற சரக்கு வாகனம் மீது மோதியது.

இதில், ராயப்பன் மனைவி சமாதானம் (55) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரில் பயணம் செய்த ராயப்பன், ஆனந்தி (31), மேரி (55), சசிகுமாா் (38), சரக்கு வாகன ஓட்டுநா் ஜேம்ஸ் (45) உள்பட 5 போ் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

தகவலறிந்த ஆம்பூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று காயமடைந்தவா்களை மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.