காா் மோதியதில் முதியவா் பலி
நாட்டறம்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்றபோது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்றபோது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூா்குப்பம் கள்ளாறு பகுதியைச் சோ்ந்தவா் கவுண்டப்பமந்திரி (70) விவசாயி. இவா் பொங்கலையொட்டி, வெள்ளிக்கிழமை ஆத்தூா்குப்பம் கிராமத்தில் நடந்த கோயில் விழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூா்குப்பம் பனந்தோப்பு எதிரே சாலையைக் கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற காா் கவுண்டப்பமந்திரி மீது மோதியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருவள்ளூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ருத்ரமூா்த்தி (24)யிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.