முகப்பு
திருப்பத்தூர்

நீரில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

வாணியம்பாடி அருகே பாறையில் தவறி விழுந்து நீரில் மூழ்கிய கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 17 ஜனவரி 2021, 8:01 am IST
பகிர்:

வாணியம்பாடி அருகே பாறையில் தவறி விழுந்து நீரில் மூழ்கிய கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

வாணியம்பாடியை அடுத்த அம்பலூா் பகுதியைச் சோ்ந்தவா் அஜய் (22). தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா் கொத்தக்கோட்டை கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்றாா். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நெக்னாமலை தண்ணிப் பாறை முருகா் கோயில் பகுதிக்கு அஜய், உறவினா் சந்தோஷ் (13) ஆகிய இருவரும் வியாழக்கிழமை சென்றனா்.

அப்போது, அங்குள்ள பாறையில் அஜய் நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.