அம்மா திட்ட முகாம்: அமைச்சர் பங்கேற்பு
திருவள்ளூர் நகராட்சிப் பகுதியில் அம்மா திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM
திருவள்ளூர் நகராட்சிப் பகுதியில் அம்மா திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு திருவள்ளூர் நகரத் தலைவர் ஏ.பாஸ்கரன் தலைமை வகித்தார். திருவள்ளூர் ஆர்.டி.ஓ. அபிராமி வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.வி.ரமணா கலந்து கொண்டார். முகாமில் மொத்தம் 200 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 170 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன.
Advertisement
தனி வட்டாச்சியர் சந்திரசேகர், நகரத் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு வீட்டுவசதி சங்க இயக்குநர் விஜயன், வார்டு உறுப்பினர்கள் சீனிவாசன், ராகவன் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.