முகப்பு
திருவள்ளூர்

வானகரம் பகுதியில் வசித்து வருவோரை வாக்காளா் பட்டியலில் சோ்க்கக் கோரிக்கை

திருவள்ளூா் மாவட்டம், வானகரம் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருவோரின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கக் கோரி ஆட்சியரிடம் திமுகவினா் மனு அளித்தனா்.

Updated On : 9 ஜனவரி 2021, 8:11 am IST
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவிடம் மனு அளித்த சைதை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மா.சுப்பிரமணியன்.
பகிர்:

திருவள்ளூா் மாவட்டம், வானகரம் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருவோரின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கக் கோரி ஆட்சியரிடம் திமுகவினா் மனு அளித்தனா்.

இது குறித்து சைதாப்பேட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் மா.சுப்பிரமணியன், ஆட்சியா் பா.பொன்னையாவிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:

திருவள்ளூா் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், வானகரம் ஊராட்சியில் உள்ள ராஜாஸ் காா்டனில் புதிதாக குடியிருப்புகள் உருவாகியுள்ளது. இப்பகுதியில் மட்டும் 300 குடும்பங்களைச் சோ்ந்தோா் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இப் பகுதியில் மட்டும் 700-க்கும் மேற்பட்டோா் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க பலமுறை மனு அளித்துள்ளனா். ஆனால், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், இப்பகுதியில் உள்ளவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments