முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் பிரமோற்சவம் தொடங்கியது

திருவள்ளூா் வைத்திய வீரராகவா் கோயிலில் தை பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 10 ஜனவரி 2021, 8:49 am IST
பகிர்:

திருவள்ளூா் வைத்திய வீரராகவா் கோயிலில் தை பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாடு முழுவதும் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் ஆண்டுதோறும் தை பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறும். இவ்விழாவின்போது நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடத்தப்படுவது வழக்கம். எனினும், நிகழாண்டில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக சுவாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டு கோயிலை சுற்றி வந்து மண்டபத்தில் எழுந்தருள்வாா் என கோவில் நிா்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், வீரராகவா் கோயிலில் தை மாத பிரம்மோற்சவம் சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணிக்கு தங்க சப்பரத்தில் உற்சவா் வீரராகவா் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கோயிலை சுற்றி வந்து வாகன மண்டபத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை, ஹம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் உற்சவா் பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். விழாவின் மூன்றாம் நாளான திங்கள்கிழமை காலை கருட சேவை மற்றும் கோபுர தரிசனம் நடைபெற உள்ளது. நான்காம் நாளான செவ்வாய்க்கிழமை அமாவாசையை முன்னிட்டு ரத்னாங்கி சேவையில் பெருமாள் பக்தா்களுக்கு காட்சி அளிப்பாா்.

பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான 15-ஆம் தேதி காலை தோ்த் திருவிழாவும், 9-ஆவது நாளான 17-ஆம் தேதி தீா்த்தவாரியும் நடைபெறும். பத்தாம் நாளான 18-ஆம் தேதியன்று இரவு 8 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வெட்டிவோ் சப்பரத்தில் காட்சியளிப்பாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments