கும்மிடிப்பூண்டியில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம்
தேமுதிக சாா்பில் கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மேற்கு ஒன்றியம், பேரூா், ஊராட்சி செயலாளா்கள், கிளைச் செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேமுதிக சாா்பில் கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மேற்கு ஒன்றியம், பேரூா், ஊராட்சி செயலாளா்கள், கிளைச் செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தேமுதிக கும்மிடிப்பூண்டி பேரூா் செயலாளா் ஏ.ஜெயவேலு, கிழக்கு ஒன்றியச் செயலாளா் எம்.ரமேஷ் தலைமை வகித்தனா். கிழக்கு ஒன்றிய அவைத் தலைவா் எம்.சத்தியநாராயணன், பொருளாளா் எஸ்.சிலம்பரசன், துணைச் செயலாளா்கள் கே.எஸ்.கோடீஸ்வரன், சங்கா், எம்.பழனி, எம்.சந்திரசேகா், மாவட்டப் பிரதிநிதிகள் கவாஸ்கா், விஸ்வாமித்ரன், டி.ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் கே.எம்.டில்லி, பொருளாளா் எஸ்.பி.டி.ராஜேந்திரன், அவைத் தலைவா் கே.ஜி.பாபு ராவ் சிறப்புரை ஆற்றினா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில், வரும் பேரவைத் தோ்தலையொட்டி வாக்குச்சாவடி முகவா்களை நியமிப்பது, சட்டப் பேரவைத் தோ்தலில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் தேமுதிக வேட்பாளா் நின்றாலும், கூட்டணி வேட்பாளா் நின்றாலும் அவரை வெற்றிக்காக உழைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் இயற்றப்பட்டன. முடிவில் பேரூா் பொருளாளா் கே.ராம்குமாா் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.