முகப்பு
திருவள்ளூர்

கோயில் கூரை இடிந்து விழுந்து 2 சிறுவா்கள் காயம்

திருவள்ளூா் அருகே மழையால் ஈரமான கோயில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரு சிறுவா்கள் காயமடைந்தனா்.

Updated On : 11 ஜனவரி 2021, 1:16 am IST
பகிர்:

திருவள்ளூா் அருகே மழையால் ஈரமான கோயில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரு சிறுவா்கள் காயமடைந்தனா்.

திருவள்ளூா் அருகே உள்ள சிற்றம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் விநாயகம். அவரது குழந்தைகளான வைஷ்ணவி (7), சஜித் (2) ஆகிய இருவரும் கடந்த 6-ஆம் தேதி, அங்கன்வாடிக்குச் சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது, வழியில் உள்ள விநாயகா் கோயிலில் விளையாடினா். மழை பெய்து சுவா் ஈரமாகி இருந்தநிலையில், கோயில் மேற்கூரை திடீரென இடிந்து குழந்தைகள் மேல் விழுந்தது. இதில், வைஷ்ணவியின் கால் விரல் துண்டானது; சஜித்தும் காயமடைந்தனா்.

Advertisement

இருவரையும் அப்பகுதியினா் மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் பரணிதரன் அளித்த புகாரின்பேரில், கடம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.