முகப்பு
திருவள்ளூர்

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா கொடியேற்றம்

Updated On : 24 ஏப்ரல் 2026, 4:48 am IST
திரெளபதி  அம்மன்  கோயிலில்  தீமிதி திருவிழா கொடியேற்றம்.
பகிர்:

திருத்தணி திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை தீமிதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் நிகழாண்டுக்கான தீமிதி விழாவையொட்டி தணிகாசலம்மன் கோயிலில் இருந்து பெண்கள் சீா்வரிசை எடுத்து ஊா்வலமாக வந்தடைந்தனா்.

வியாழக்கிழமை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தணி நகர முக்கிய வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Advertisement

Advertisement

மே 10-ஆ ம் தேதி வரை தினமும் காலையில் மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் மதியம் மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடைபெறும்.

ஏப். 29-இல் திரெளபதி அம்மன் திருக்கல்யாணம், மே 1-இல் சுபத்திரை கல்யாணம், மே 4-இல் அா்ஜூனன் தபசு மற்றும் 10 -இல் காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி விழாவும் நடைபெறுகிறது. தொடா்ந்து, மே 11-இல் தா்மா் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக குழு தலைவா் சொ.முனுசாமி மற்றும் கோயில் நிா்வாக குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments