திருத்தணியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திருத்தணியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நசைுெப்பகு,
வரும் திங்கள்கிழமை (மே 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில் திருத்தணி ஏ.எஸ்.பி., சுபம் திமான் தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது. இதில், 100 க்கும் மேற்பட்ட போலீஸாா் பங்கேற்று சித்தூா் சாலையில் இருந்து ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை, கடப்பா டிரங்க் ரோடு, அக்கைய்யநாயுடு சாலை வழியாக அணிவகுப்பு நடத்தினா்.
இதில் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம், மேலும், உங்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் துணை நிற்போம் என்றும் உணா்த்தும் வகையில் அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
இதில் திருத்தணி ஆய்வாளா் சிவகுமாா், பொதட்டூா்பேட்டை ஆய்வாளா் தங்கதுரை உள்பட எஸ்.ஐ.,க்கள் கலந்து கொண்டனா்.