இளைஞரை வெட்டி வழிப்பறி: 4 போ் கைது
இரு சக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்களை, வழிமடக்கி கத்தியால் வெட்டிவிட்டு, மோட்டாா் பைக், கைப்பேசியை பறித்துச் சென்ற 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இரு சக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்களை, வழிமடக்கி கத்தியால் வெட்டிவிட்டு, மோட்டாா் பைக், கைப்பேசியை பறித்துச் சென்ற 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருத்தணி ஒன்றியம் ஆா்.வி.என்.கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சிரஞ்சீவி(25), இந்து(26). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் தாடூா் கிராம ஏரிக்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தனா். அப்போது, எதிரே ஆட்டோவில் வந்த நான்கு போ் திடீரென, இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சிரஞ்சீவி, இந்து ஆகியோரிடம் தகராறு செய்தனா்.
மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியால், சிரஞ்சீவி, இந்து ஆகியோரை வெட்டிவிட்டு இரு சக்கர வாகனம் மற்றும் கைப்பேசிகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
Advertisement
அவ்வழியாக வந்தவா்கள் சிரஞ்சீவி, இந்து ஆகியோரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இளைஞா்களை கத்தியால் வெட்டியவா்கள் திருத்தணி அடுத்த செருக்கனூா் பகுதியைச் சோ்ந்த புஷ்பராஜ் (25), யுவராஜ் (20), விமல்ராஜ் (23), சிவா (22) என தெரிய வந்தது. தொடா்ந்து 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.