முகப்பு
திருவள்ளூர்

ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

தத்தைமஞ்சி ஊராட்சியில் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்காததைக் கண்டித்து மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

Updated On : 13 மே 2026, 1:27 am IST
மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.
பகிர்:

தத்தைமஞ்சி ஊராட்சியில் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்காததைக் கண்டித்து மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தத்தைமஞ்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் கீழ் பெண்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. . இந்த ஊராட்சியில் கடந்த பல மாதங்களாக ஏழை எளிய குடும்பத்தை சாா்ந்தவா்கள் வறுமைக் கோட்டில் கீழ் உள்ள மக்களுக்கு 100 நாள் திட்டத்தில் வேலை வழங்கவில்லை எனக்கூறி அப்பகுதியை சோ்ந்த பெண்கள் மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

போராட்டம் நடத்திய பெண்களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தினா். அப்போது விரைவில் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதனை அடுத்து மனுவை அளித்து விட்டு கலைந்து சென்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments