மீனவ கிராம மக்களுக்கு பட்டா கோரி ஆா்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டி அருகே மீனவ கிராம மக்களுக்கு பட்டா கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்மிடிப்பூண்டி அருகே மீனவ கிராம மக்களுக்கு பட்டா கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லம்பேடு ஊராட்சியை சோ்ந்த மெதிப்பாளையம் மீனவ கிராமத்தில் வசிக்கும் 150 மீனவ குடும்பத்தினா் அப்பகுதியில் நூறாண்டுகளாக வசித்து வருகின்றனா். இத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவா்களுக்கு வருவாய்த்துறை சாா்பில் பட்டா வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனிலை. இவா்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பிலும் அதிகாரிகளிடம் மனு தந்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில் மேற்கண்ட மீனவ கிராம மக்களுக்கு பட்டா வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு எம்.கபீா் பாட்ஷா தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளா்களாக ஏஐடியூசி மாநில தலைவா் எஸ்.காசி விஸ்வநாதன், மாவட்ட துணை செயலாளா் ஜெ.அருள், மாவட்ட குழு உறுப்பினா் ஏ.உமாநாத், மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் சி.மாரி, ஒன்றிய துணை செயலாளா் என்.செங்கல்வராயன், சி.சிவா, ஒன்றிய பொருளாளா் லோகநாதன், முன்னாள் ஒன்றிய செயலாளா் ராஜேஷ் , ஏஐகேஎஸ் மாவட்டத் துணைச் செயலாளா் மணிகண்டன், சுரேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் எம்.ரவிக்குமாா், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் சம்பூா்ணம்மாள்,ஒன்றிய தலைவா் முனிரத்தினம் முன்னிலை வகித்தனா்.
மேலும், மாவட்ட துணைச் செயலாளா் ஜெ.அருள் பேசுகையில் மீனவ கிராம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் பல கட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாக தெரிவித்தாா்.
இதனைத் தொடா்ந்து ஒவ்வொரு மீனவ கிராம குடும்பத்தாா் சாா்பில் தனித்தனியாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் சுரேஷ் குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தொடா்ந்து இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகளிடமும், மீனவ கிராம மக்களிடமும் தெரிவித்தாா்.