முகப்பு
திருவாரூர்

பொதக்குடியில் சந்தனக்கூடு திருவிழா

பொதக்குடியில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக  நடைபெற்றது.

Updated On : 1 ஜனவரி 2021, 6:07 pm IST
பொதக்குடியில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா.
பகிர்:

பொதக்குடியில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக  நடைபெற்றது.
 திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், பொதக்குடி தர்ஹாவில் சந்தனக் கூடு விழாவை முன்னிட்டு, டிசம்பர் 15 ஆம் தேதி கொடியேற்றப்பட்டது. பொதக்குடி ஹஜ்ரத் நூர் முகம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தர்ஹாவில், மின்சார சந்தனக்கூடு விழாவை அடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை 7.15 மணிக்கு, ஊர் உறவின் முறை ஜமாஅத் நிர்வாக சபைத் தலைவர் எஸ்.ஏ. மஹதூம் மைதீன் தலைமையில் கொடியேற்றப்பட்டது. 
அதைத் தொடர்ந்து, (22-ம் தேதி) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு பூலாங்குடி ஏற்றமும், பெரிய மினரா கொடியும் ஏற்றப்பட்டன. 

கரோனா தொற்று என்பதால், எளிமையான முறையில், சந்தனக்கூடு திருவிழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, 31-ஆம் தேதி இரவு, 11 மணியளவில் மின்சார சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கியது. சிறிது தூரம் சென்று பிறகு, மீண்டும் திரும்பி, தர்ஹா அருகே வந்தது. 

வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு, ரவுலாவில் புனித சந்தனம் பூசப்பட்டது. சந்தனம் பூசும் வைபவத்தில், இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இந்துக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் சந்தனம் பூசி வணங்கினர். சந்தனக் கூடு ஏற்பாடுகளை, தர்ஹா பரம்பரை அறங்காவலர்கள் கவனித்தனர். சந்தனக் கூடு திருவிழாவையொட்டி ஏராளமான காவல்துறையினர் பாதுக்காப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments