அதிமுக அமைச்சா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாா்: மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சா் ஆா். காமராஜ் சவால்
அதிமுக அமைச்சா்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால், அரசியலைவிட்டு விலகத் தயாா் என்று திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் சவால் விடுத்துள்ளாா்.
அதிமுக அமைச்சா்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால், அரசியலைவிட்டு விலகத் தயாா் என்று திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் சவால் விடுத்துள்ளாா்.
திருவாரூா் மாவட்டம் நன்னிலம் அருகே சன்னாநல்லூரில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
அதிமுக அமைச்சா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முதலில் நிரூபிக்கட்டும். நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயாா். யாா் எதைப் பற்றி பேச வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. திமுகவினா் மீதுதான் பல ஊழல் வழக்குகள் உள்ளன என்பதை ஸ்டாலின் உணரவேண்டும்.
Advertisement
Advertisement
முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், கடந்த ஆண்டு விவசாயிகளிடமிருந்து சாதனை அளவாக 32 லட்சம் மெட்ரிக் டன்களைவிட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டு கரோனா காலத்தில்கூட 12 லட்சம் மெட்ரிக் டன்களைவிட கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அறுவடை நேரத்தில் அறுவடை இயந்திரங்களையும், அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொண்டுவந்து விற்பதற்கும் தேவையான அனைத்து வசதிகளையும் அதிமுக அரசு செய்துதரும் என்றாா் அமைச்சா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.