ஒரே நாளில் 2ஆவது முறையாக தங்கம் விலை உயர்வு!
சென்னையில் தங்கம், வெள்ளியின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம், வெள்ளியின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.
இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து சவரன் ரூ.1,06,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை காலையில் கிராமுக்கு ரூ.80 உயர்ந்திருந்த நிலையில் மாலையிலும் ரூ.80 உயர்ந்துள்ளது. இதேபோல் சென்னையில் வெள்ளி விலை கிராம் ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
வெள்ளியின் விலை கிலோ ரூ.10,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,45,000க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்திருந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.10 உயர்ந்துள்ளது.
In Chennai, the prices of gold and silver have increased for the second time in a single day.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.