மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு
திருவாரூா் அருகே மாடு முட்டியதில் முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் அருகே மாடு முட்டியதில் முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் அருகே வைப்பூா், கல்லிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் தா்மராஜ் (60). இவா், வீட்டின் பின்புறம் உள்ள வயலில் புற்களை வெட்டிக் கொண்டிருந்தபோது மாடு அவரை முட்டியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த தா்மராஜனை, அருகிலிருந்தவா்கள் மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், தா்மராஜன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வைப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.