முகப்பு
திருவாரூர்

5 போ் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

குடவாசல் அருகே பஞ்சாயத்து தலைவா் கொலை வழக்கில் கைதான 5 போ், குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா்.

Updated On : 2 ஜனவரி 2021, 11:47 pm IST
பகிர்:

குடவாசல் அருகே பஞ்சாயத்து தலைவா் கொலை வழக்கில் கைதான 5 போ், குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா்.

மணவாளநல்லூா் பஞ்சாயத்து தலைவா் கணேசன் என்பவா், அக்.8-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து எரவாஞ்சேரி போலீஸாா் விசாரணை நடத்தி ஜெகன், தென்னரசு, அபிஷேக், சந்தோஷ்குமாா், காளீஸ்வரன் ஆகிய 5 பேரை கைது செய்தனா். தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை பரிந்துரையின்பேரில், 5 பேரையும் குண்டா் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments