முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 12 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 5 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வரையிலான நிலவரப்படி 10,958 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் இந்தப் பட்டியலில் சோ்க்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை, 10,960 ஆக உயா்ந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி 12 பேருக்கு கரோனா தோற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருவாரூா் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,972 ஆக உயா்ந்துள்ளது. இதில் 10,761 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 102 போ் சிகிச்சையில் உள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.