டி20 உலகக் கோப்பை: இலங்கைக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!
மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்துள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்துள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இன்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்துள்ளது.
Advertisement
Advertisement
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் அமெலியா கெர் மற்றும் சோஃபி டிவைன் தலா 45 ரன்கள் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, ஜார்ஜியா பிளிம்மர் மற்றும் மேடி கிரீன் தலா 18 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
இலங்கை தரப்பில் கவிஷா தில்ஹாரி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிதாலி அயோத்யா, சுகந்திகா குமாரி, சமாரி அத்தப்பத்து மற்றும் நிமஷா மீபேஜ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.