முகப்பு
திருவாரூர்

காலமுறை ஊதியம் கோரி காத்திருப்புப் போராட்டம்

காலமுறை ஊதியம் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 9:23 am IST
திருவாரூரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள்.
பகிர்:

காலமுறை ஊதியம் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிராம உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் ரூ.15,700 அடிப்படை ஊதியமாக வழங்க வேண்டும்; மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையாக ஊக்கத் தொகை ரூ.7,000 மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ 7,850 வழங்க வேண்டும்; காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் புதிய ரயில் நிலையம் முன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகையன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் எஸ். தமிழ்செல்வன், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில், கிராம உதவியாளா்கள் பலா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.