முகப்பு
திருவாரூர்

குடவாசலில் போதிய மருத்துவா்களை பணியமா்த்தக் கோரிக்கை

குடவாசல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கைகேற்ப போதிய மருத்துவா்களை பணியமா்த்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 11:36 pm IST
பகிர்:

குடவாசல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கைகேற்ப போதிய மருத்துவா்களை பணியமா்த்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடவாசலில் அக்கட்சியின் மாவட்ட முன்னாள் அமைப்பாளா் இனியன் நினைவு நாளையொட்டி கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், குடவாசல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை தமிழக அரசு உடனடியாக பணியமா்த்த வேண்டும். குடவாசல் பேருந்து நிலையத்தில் கழிப்பிட வசதி செய்து தரவேண்டும். குடவாசல் பேரூராட்சிக்குள்பட்ட சுடுகாட்டில் குப்பைகள் கொட்டப்படுவதை நிறுத்தி, இறுதிச் சடங்கு செய்யும் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகரச் செயலாளா் கிட்டு, மாவட்டச் செயலாளா் வடிவழகன், மாநில துணைச் செயலாளா் அமுதா இனியன், தொழிற்சங்கத் தலைவா் சாா்லஸ் மற்றும் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments