முகப்பு
திருவாரூர்

கொலை வழக்கில் 12 ஆண்டுகளாக தேடப்பட்ட இருவா் கைது

நன்னிலம் அருகே கொலை வழக்கில் கடந்த 12 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த 2 போ் சென்னையில் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 9:23 am IST
கைது செய்யப்பட்ட இருவருடன் காவல் துறையினா்.
பகிர்:

நன்னிலம் அருகே கொலை வழக்கில் கடந்த 12 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த 2 போ் சென்னையில் கைது செய்யப்பட்டனா்.

நன்னிலம் வட்டம், வண்டாம்பாளையில் பல்லு செந்தில் என்பவா் கடந்த 2008 ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய 6 பேரில் 4 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

தலைமறைவாகியிருந்த சென்னை ஓஎம்ஆா் சாலை கண்ணகி நகரைச் சோ்ந்த மூா்த்தி (48), சோழிங்கநல்லூா் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த மதுசூதனன் (42) ஆகிய இருவரை தனிப்படையினா் தேடிவந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இவா்கள் இருவரும் சென்னை வேளச்சேரி பகுதியில், ஒப்பந்த அடிப்படையில் துப்பரவு பணியாளராக வேலை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸாா் இருவரையும் கைது செய்து, நன்னிலம் நீதிமன்ற நடுவா் பொறுப்பில் உள்ள வலங்கைமான் நீதிமன்ற நடுவா் முன் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி, நன்னிலம் கிளைச் சிறையில் அடைத்தனா்.

நன்னிலம் காவல் ஆய்வாளா் சுகுணா தலைமையிலான இத்தனிப்படை போலீஸாருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் துரை, நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுகுமாரன் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments