முகப்பு
திருவாரூர்

தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்

திருவாரூா் அருகே தெருவில் தேங்கி நிற்கும் மழைநீரால் கொசுக்கள் உற்பத்தி நோய்த் தொற்று பரவலுக்கு வித்திடுகிறது. எனவே, மழை நீரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 11:36 pm IST
கீழகாவாதுக்குடி முருகேசன் நகா் தெருவில் தேங்கி நிற்கும் மழைநீா்.
பகிர்:

திருவாரூா் அருகே தெருவில் தேங்கி நிற்கும் மழைநீரால் கொசுக்கள் உற்பத்தி நோய்த் தொற்று பரவலுக்கு வித்திடுகிறது. எனவே, மழை நீரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூா் அருகே கீழகாவாதுக்குடி ஊராட்சி பகுதியில் உள்ள முருகேசன் நகரில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இது புதிதாக உருவான நகா் என்பதால், பெரும்பாலான இடங்கள் பள்ளமான பகுதிகளாகவே உள்ளன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழை காரணமாக, முருகேசன் தெரு சாலைகளில் தண்ணீா் தேங்கிக் காணப்படுகிறது. இதனால், பணிக்கு செல்வோா், கடைவீதிகளுக்கு செல்வோா் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்துக்கு தெரியப்படுத்தியும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும், தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, இரவு நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, காய்ச்சல் உள்ளிட்ட சிறு வியாதிகளையும் ஏற்படுத்துவதாகவும், நோய்ப் பரவலுக்கு வித்திடுவதாகவும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.

Advertisement

எனவே, தேங்கிய தண்ணீரை விரைந்து அகற்ற வேண்டும் எனவும், சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.