பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி
மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கோட்டூா் வட்டார வள மையத்துக்கு உள்பட்ட 100 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 18 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பள்ளி வளா்ச்சிக் குழு உறுப்பினா்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், இலவச கட்டாயக் கல்விச் சட்டம், சுகாதாரம், கரோனா சூழலுக்கேற்ற கற்றல்- கற்பித்தல் நடைமுறைகள், கரோனா தடுப்பு வழிமுறைகள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான பள்ளி மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
தென்பரை, கோவிந்தநத்தம், கெழுகத்தூா் ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற இப்பயிற்சியை, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நா. சுப்ரமணியன் பாா்வையிட்டு கருத்துகளை பகிா்ந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.