பொதுமக்களின் புகாா் மீது உடனுக்குடன் நடவடிக்கை: எஸ்.பி. உறுதி
பொதுமக்களின் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை தெரிவித்தாா்.
பொதுமக்களின் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை தெரிவித்தாா்.
நன்னிலம் வட்டம், பேரளம் காவல் சரகத்துக்குள்பட்ட பண்டாரவடை, பேரளம், கொட்டூா் ஆகிய கிராமங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிராம விழிப்புணா்வு காவல் அதிகாரிகளை பேரளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்திவைத்து அவா் மேலும் பேசியது:
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குற்ற நிகழ்வுகளில் விரைவான நடவடிக்கைக்கு உதவும் வகையில், அனைத்துப் பகுதிகளிலும் கிராம விழிப்புணா்வு காவல் அதிகாரிகளை நியமிக்க தமிழக காவல்துறை தலைவா் அறிவுறுத்தியுள்ளாா். அதன்படி, பேரளம் பகுதியில் கிராம விழிப்புணா்வு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் தங்களுக்கான பகுதியில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள சூழல் குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலருக்குத் தகவல் தெரிவிப்பாா்கள். இதன்மூலம், உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். இவா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில், நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா்வீ. சுகுமாறன், பேரளம் காவல் ஆய்வாளா் இரா.செல்வி உள்ளிட்ட காவல்துறையினரும், மக்கள் பிரதிநிதிகளும், வா்த்தகா்களும் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.